Tuesday, October 16, 2007

சொந்தமடி நீ எனக்கு


சொல்லத்தான் தெரியவில்லை சொந்தங்களை


சோதித்துப்பார்க்காதே உயிரே வந்துவிடு


அள்ளிக் கொடுத்த இன்பங்களும்


அரட்டை அடித்த வேப்பமர நிழல் கற்குந்தும்


காற்று வாங்கிய மொட்டை மாடியும்


பெயர் பொறித்த மரங்களும்


ஏறித்தாவி விளையாடிய தேமா மரமும்


ஆண்டுகளானாலும் அழியவில்லை


தேடிப்பார்த்த பொழுது


நினைவுகளாலும் சிதையவில்லை


பாடித்திரிந்த பொழுதுகளும்


பட்டம் விட்ட வயல் வெளியும்


கைகோர்த்து நாம் சென்ற பாதைகளும்


உன்னோடு என் பொழுதுகளும்


கண்ணீரிலும் கரையவில்லை


எண்ணச்சிதறல்கள் விதி மாறிப்போனாலும்


கண்ணில் உன்விம்பம்


களங்கமின்றி சிரிக்கின்றது....