
சொல்லத்தான் தெரியவில்லை சொந்தங்களை
சோதித்துப்பார்க்காதே உயிரே வந்துவிடு
அள்ளிக் கொடுத்த இன்பங்களும்
அரட்டை அடித்த வேப்பமர நிழல் கற்குந்தும்
காற்று வாங்கிய மொட்டை மாடியும்
பெயர் பொறித்த மரங்களும்
ஏறித்தாவி விளையாடிய தேமா மரமும்
ஆண்டுகளானாலும் அழியவில்லை
தேடிப்பார்த்த பொழுது
நினைவுகளாலும் சிதையவில்லை
பாடித்திரிந்த பொழுதுகளும்
பட்டம் விட்ட வயல் வெளியும்
கைகோர்த்து நாம் சென்ற பாதைகளும்
உன்னோடு என் பொழுதுகளும்
கண்ணீரிலும் கரையவில்லை
எண்ணச்சிதறல்கள் விதி மாறிப்போனாலும்
கண்ணில் உன்விம்பம்
களங்கமின்றி சிரிக்கின்றது....
No comments:
Post a Comment