Tuesday, December 18, 2007

நீயாக நீங்கின்......







எதிர்பாராத சந்திப்பு
ஏற்பட்ட உறவிது
ஒன்றல்ல இரண்டல்ல
ஐந்தாண்டு காத்திருப்பு
சந்தித்த வேளை
சிந்திக்கவில்லை
சுற்றமும் உறவும்பற்றி
இன்று உனது தாயார்
நேற்று உன் சிற்றப்பன்
உன் தம்பியும் கூட
வழியில்வைத்து
புரியவில்லை அவர்களிற்கு
தெரிவதெல்லாம்
சுற்றத்து வாய்கொழுப்புகள்
சொல்லிவிட்டேனவர்களிடம்
நீ என்னைவிட்டு நீயாக நீங்கின்
என் வழியில் நான் செல்வேன் என!

1 comment:

ரசிகன் said...

நல்லாயிருக்குங்க உங்க கவிதை