
தனிமையை நான் உணரவில்லை-உன்
தோள்கள் எனை தாங்கிக்கொண்டன
அன்னையின் அணைப்பை
தந்தையின் காவலை
உன் அன்பில் நான் காண்கின்றேன்
என் வரையில் இது புதிதுதான்
என் பிழைகள் மன்னித்தாய் மறந்தாய்
என்னை எனக்கே உணரவைத்தாய்.
அதன் மென்மையையும் கூடத்தான்
உன்னுடன் என் பொழுதுகள்
தெவிட்டாத கணங்கள்!
No comments:
Post a Comment