Tuesday, May 15, 2007

வலி இன்றிய பிரிவு

என் கண்கள் பனித்தது கூட
தெரியாமல் தொடர்கிறது
உன் வேகம்
பேச்சுக் கணைகளால்
நீ புண்படுத்திய நெஞ்சம்
இன்னும் ஆறவில்லை
போதும் இத்துடன் விட்டுவிடு
என்னையும் என் கனவுகளையும்
கூண்டுக்குள் அடைபட விருப்பமில்லை
உன் பேச்சுகளிற்கு "ஆமா" போட
இனி மேலும் விருப்பமில்லை
உனக்காக என்னை மாற்றினேன்
என் கொள்கைகளை கூட
நீ மட்டும் மாறவில்லை
நம் உறவிற்காக கூட
சென்று வருகின்றேன்
நீ போட்ட விலங்கையும் தாண்டி
உன் வாசல் மீறி
என் கனவுகளுடன்
சுதந்திரமாக

1 comment:

வேல் சாரங்கன் said...

ஓ...!
அழகிய கவிதை...!
சற்று சிந்திக்க வைக்கிறது....!

பிரிவுகளில் தானே
வலிகள் உணரப்படுகின்றன....?
வலியின்றி எப்படி பிரிவு...?

சாத்தியம் தான்...
உறவுகளே வலியானால்
பிரிவிலும் இருக்குமோ
இனிமை....

உலகில் பல விடயங்களை
மாற்ற முடிவதே இல்லை;
முயற்சியால் கூட...

உங்கள் கவிதை,
கவிதை தருகிறது;

'உலகையே மாற்ற முடிய்ம்
என்னால்
உனக்காக....
உன்னை மட்டும்
மாற்ற முடிந்தால்,
எனக்காக....!'

வாழ்த்துகளுடன்,
வேல்.சாரங்கன்.
www.vaanampaadi.blogspot.com