Monday, June 18, 2007

அர்த்தங்கள்

பாவங்கள் பல பண்ணிவிட்டு
புண்ணியம் தேடி
தியாகங்கள் பல புரிந்து
யாகம் ஒன்று பண்ணினோம்
முடிவுகள் இன்றி
விடியல்கள் இன்றி
விரைந்தோடுகிறது காலங்கள்
கலக்கமுடன் விழித்திருக்கின்றோம்
யாகங்களின் நம்பிக்கையில்
விதைக்கப்பட்ட இளம் இரத்தங்கள்
உணர்த்த முயன்ற கதைகள் பல
அவையெல்லாம்.....
காலத்தால் உணரப்படாது
மண்ணுக்குள்ளே விதைக்ளாய்!
கண்ணிமைக்கும் பொழுதில்
கனவாக மாறும் வாழ்க்ககயில்
கண்ணீரும் கம்பலையுமோ
எம் வாழ்வின் அர்த்தங்கள்?

2 comments:

Unknown said...

Simply great!
Keep it up

Anonymous said...

மறைமுகமான உங்கள் கருத்துக்கள் அனுபவித்தவர்களிற்கு மாத்திரமே புரியும்! தொடரட்டும் உங்கள் முகவரியை தேடிய பயணங்கள் வாழ்த்துக்கள்